sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

யானை தாக்கி விவசாயி பலி உடலுடன் மக்கள் மறியல்

/

யானை தாக்கி விவசாயி பலி உடலுடன் மக்கள் மறியல்

யானை தாக்கி விவசாயி பலி உடலுடன் மக்கள் மறியல்

யானை தாக்கி விவசாயி பலி உடலுடன் மக்கள் மறியல்


ADDED : ஜன 31, 2024 01:03 AM

Google News

ADDED : ஜன 31, 2024 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடையை சேர்ந்தவர் சாம்பசிவம், 55. விவசாயி. இவர், நேற்று முன் தினம் காலை 6:00 மணிக்கு, பூவகவுண்டன் ஏரி அருகேயுள்ள தன் நிலத்துக்கு சென்றார்.

அங்குக் திரிந்த ஒற்றை யானை, சாம்பசிவத்தை தாக்கியது. அதே இடத்திலேயே உயிரிழந்தார். வனத்துறையினர் மற்றும் மகாராஜகடை போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

சாம்பசிவம் சடலத்துடன், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மக்கள், 100க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி சாலையில் மறியலில் நடத்தினர்.

யானைகளை விரட்ட, வனத்துறையினரிடம் கூறியும் நடவடிக்கை இல்லை எனக்கூறி, பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

யானைகள் விவசாய நிலத்துக்கு வராமல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவதாக வனத்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டடது.

ஆந்திராவை ஒட்டிய அடர்ந்த வனப்பகுதியான மகாராஜகடையை சுற்றி, 40 கிராமங்கள் உள்ளன.

இங்கு ஆண்டுதோறும் ஜனவரி முதல் கோடைகாலம் வரை கர்நாடக, ஆந்திர மாநில வனப்பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள், விவசாய நிலங்களில் புகுந்து, பயிர்களை நாசம் செய்தும், விவசாயிகளை தாக்குவதும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us