ADDED : அக் 24, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின்னல் தாக்கி விவசாயி பலி
தேன்கனிக்கோட்டை, அக். 24-
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த தொட்டமஞ்சு அருகே சிக்கமஞ்சு பக்ரி சாயபு கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பா. இவரது மனைவி பத்திரம்மா, 38. அப்பகுதியில் உள்ள தன் விவசாய நிலத்தில் பீன்ஸ் சாகுபடி செய்திருந்தார்.
நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு, மழை பெய்தபோது, பீன்ஸ் அறுவடையில் ஈடுபட்டார். அப்போது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அஞ்செட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

