ADDED : ஜூன் 01, 2026 05:14 AM
அ நிறம் | அளவு
தேன்கனிக்கோட்டை; தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் கோவில் தெருவில் உள்ள மஞ்சுநாதா லே அவுட்டை சேர்ந்தவர் நாராயணன், 45. துணி கடை வைத்-துள்ளார்.
அதற்கு தேவையான துணிகளை, தன் வீட்டின் கீழ் பகுதியிலுள்ள குடோனில் வைத்தி-ருந்தார். நேற்று முன்தினம் இரவு குடோனில் தீப்-பிடித்தது. இதில், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமாகின. தேன்கனிக்-கோட்டை தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து, தீ விபத்திற்கு மின்கசிவு காரணமா அல்லது வேறு ஏதாவது கார-ணமா என விசாரிக்கின்றனர்.
