ADDED : ஜன 20, 2026 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்; ஓசூர் மாநகராட்சி, 43வது வார்டுக்கு உட்பட்ட குருப்பட்டியை சேர்ந்தவர் தொட்டையா, 60. இவர் தன் மாடுகளுக்கு தீவனமாக வழங்க, 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான ராகி போரை வாங்கி, நிலத்தில் அடுக்கி வைத்திருந்தார்.
நேற்று மதியம், 3:30 மணிக்கு திடீரென ராகி போரில் தீப்-பிடித்தது. அருகிலிருந்த செடி கொடிகளில் தீ பர-வியது. ஓசூர் தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் போராடி மாலை, 6:15 மணிக்கு மேல் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், 4 லட்ச ரூபாய் மதிப்பிலான ராகி போர் எரிந்து நாசமா-னது. மர்ம நபர்கள் ராகி போருக்கு தீ வைத்தார்-களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர். ராகி போர் தீ விபத்தில் அதிகளவு புகை வெளியேறியதால், அப்பகுதியினர் கடும் அவதிப்பட்டனர்.

