/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காட்டாற்று வெள்ளம் மீனவர்கள் பாதிப்பு
/
காட்டாற்று வெள்ளம் மீனவர்கள் பாதிப்பு
ADDED : டிச 03, 2024 07:08 AM
ஊத்தங்கரை: ஊத்தங்கரை பாம்பாறு அணையில், 17 மீனவர்கள் மீன் பிடி தொழில் செய்து
வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் பாம்பாறு அணைக்கு
அதிக நீர்வரத்தால் விநா-டிக்கு, 15,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதில்
மீனவர்-களின் மீன்பிடி வலைகள், 120 கிலோ அளவிற்கு அடித்து செல்-லப்பட்டது.
இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்-டுள்ளது. மேலும், 5 மதகுகள்
வழியாக நீர் வெளியேற்றப்பட்-டதால், பாம்பாறு அணையிலிருந்து மீன்கள், மீன்
குஞ்சுகள் அதி-களவில் வெளியேறியது. இதனால் மீன் குத்தகைதாரர்களுக்கு, 40
லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, ஆய்வு செய்து மீனவர்கள்
மற்றும் குத்தகைதாரர்களுக்கு உரிய நிவா-ரணம் வழங்க, கோரிக்கை எழுந்துள்ளது.