/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
20 ஆண்டுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்
/
20 ஆண்டுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்
ADDED : டிச 29, 2025 09:59 AM
சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த அட்ட-குறுக்கி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடு-நிலைப்பள்ளியில், 2005 - 06ம் ஆண்டில், 8ம் வகுப்பு படித்த மாணவ, மாணவியர், 40க்கும் மேற்பட்டோர், 20 ஆண்டுக்கு பின் நேற்று சந்-தித்து கொண்டனர்.
இவர்கள் படித்த பள்ளி, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்-பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்-தது.தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள் வாசுகி, கண்மணி ஆகியோரை கவுரவித்து, நினைவு பரி-சுகளை வழங்கினர். அனைவரும், தங்களது பள்-ளிகால நினைவுகள், அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.

