/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
622 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
/
622 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
ADDED : பிப் 15, 2026 04:53 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நி-லைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு, தமிழக அரசின் விலை-யில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. தலைமையாசி-ரியர் வளர்மதி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். துணை மேயர் ஆனந்-தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.
ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா ஆகியோர், ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் பள்ளி, உருது பள்ளியில் படிக்கும், 337 மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர். தி.மு.க., மாவட்ட பொருளாளர் சுகுமார், பெண்கள் மேல்நிலைப்-பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எல்லோராமணி, கவுன்-சிலர் மோசின்தாஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.கெலமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 285 மாணவ, மாணவியருக்கு, தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்-திரன், விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். கெலமங்-கலம் டவுன் பஞ்., தலைவர் தேவராஜ் உட்பட பலர் பங்கேற்-றனர்.

