/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை 'ஜோர்'
/
போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை 'ஜோர்'
ADDED : டிச 08, 2025 07:50 AM
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று 1,000க்கும் மேற்பட்ட ஆடுகள், 500க்கும் மேற்பட்ட கறவை, நாட்டின மாடுகளை வியாபாரிகள், விவ-சாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
ஆடுகளை வாங்க, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்-ளிட்ட மாவட்டங்களிலிருந்து வியாபாரிகளும், கறவை, நாட்டின மாடுகளை வாங்க, சுற்று வட்-டார பகுதியிலுள்ள விவசாயிகளும் அதிகளவு ஆர்வம் காட்டி வந்திருந்தனர். இதனால் நேற்று அதிகாலை முதல் ஆடுகள், கறவை மாடுகள் மற்றும் கன்றுகள் வியாபாரம் சுறுசுறுப்பாக நடந்-தது. வியாபாரத்திற்கு கொண்டு வரப்பட்ட
ஆடுகள் மற்றும் மாடுகள் அனைத்தும் விற்பனை-யானது. களைகட்டிய விற்பனையால் போச்சம்-பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள், மாடுகள், 80 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக வியாபா-ரிகள் தெரிவித்தனர்.

