sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சிந்தல்தொட்டி கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் சேவை

/

சிந்தல்தொட்டி கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் சேவை

சிந்தல்தொட்டி கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் சேவை

சிந்தல்தொட்டி கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் சேவை


ADDED : ஜூன் 05, 2025 01:01 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரிகை, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த பி.எஸ்.திம்மசந்திரம் பஞ்., உட்பட்ட சிந்தல்தொட்டி கிராமத்திற்கு, 50 ஆண்டுக்கும் மேலாக பஸ் வசதி இல்லாததால், மாணவ, மாணவியர், கிராம மக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, கடந்த சட்டசபை கூட்டத்தொடரில், ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், பஸ் வசதி கேட்டு பேசினார். அதையேற்று, சிந்தல்தொட்டி கிராமத்தில் இருந்து, பேரிகை அரசு மேல்நிலைப்பள்ளி வரை, 24ம் எண் அரசு டவுன் பஸ் இயக்க உத்தரவிடப்பட்டது.

நேற்று முதல் முறையாக, பஸ் போக்குவரத்து துவங்கிய நிலையில், எம்.எல்.ஏ., பிரகாஷ் போக்குவரத்தை இயக்கி துவக்கி வைத்து, பேரிகை அரசு மேல்நிலைப்பள்ளி வரை, மாணவ, மாணவியரை பஸ்சை ஓட்டி அழைத்து சென்றார்.

தி.மு.க., இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன், சூளகிரி வடக்கு ஒன்றிய செயலாளர் நாகேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஹரிஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us