/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒன்னல்வாடி பஞ்.,ல் கிராம சபை கூட்டம்
/
ஒன்னல்வாடி பஞ்.,ல் கிராம சபை கூட்டம்
ADDED : ஜன 27, 2025 02:36 AM
ஓசூர்: ஓசூர் ஒன்றியம், ஒன்னல்வாடி கிராமத்தில், குடியரசு தினத்தை-யொட்டி பஞ்., செயலர் பாலசந்திரபாபு மற்றும் பி.டி.ஓ., அலுவ-லக உதவியாளர் காமராஜ் ஆகியோர் தலைமையில், கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.
ஒன்னல்வாடி பஞ்., முன்னாள் தலைவர் மாதேவம்மா பீரப்பா உட்பட, 100க்கும் மேற்பட்டோர், கோரிக்கை மனுக்களை வழங்கினர். குறிப்பாக, ஓசூர் மாநகராட்-சியுடன், ஒன்னல்வாடி பஞ்.,த்தை இணைக்க அரசாணை வெளி-யிடப்பட்டுள்ளது. இதனால் பஞ்.,ல் உள்ள, 1,200 ஏக்கர் விளை-நிலங்கள் பாதிக்கப்படும். குடிநீர் கட்டணம், சொத்து வரி உயரும். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூட்டத்தில் தெரிவித்த பொதுமக்கள், மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம சபை கூட்டத்தில் மனுக்களை வழங்கினர்.

