/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஊத்தங்கரையில் கடும் பனிப்பொழிவு
/
ஊத்தங்கரையில் கடும் பனிப்பொழிவு
ADDED : ஜன 09, 2025 07:58 AM
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் கார்த்திகை மாதம் தொடக்கத்திலிருந்து, மாசி மாதம் வரை, 4 மாதங்களுக்கு பனிப்-பொழிவு அதிகமாக காணப்படும். ஊத்தங்கரை, சிங்காரப்-பேட்டை, காரப்பட்டு, அனுமன்தீர்த்தம் உள்ளிட்ட பல பகு-தியில், நேற்று காலை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. காலை, 8:30 மணியாகியும் பனி மூட்டம் குறையவில்லை.
சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிப்-பொழிவு காணப்பட்டது. இதனால், சாலையில் வந்த வாக-னங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு ஊர்ந்து சென்றன. கடும் பனி மூட்டத்தால், பள்ளி, கல்லுாரிகளுக்கு மாணவ, மாண-வியரை அழைத்துச்செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். பனியால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.