/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மிரண்டு ஓடிய குதிரை; வாகன ஓட்டிகள் பாதிப்பு
/
மிரண்டு ஓடிய குதிரை; வாகன ஓட்டிகள் பாதிப்பு
ADDED : ஆக 05, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஓசூர், அரசு மருத்துவமனை அருகே ராமநாயக்கன் ஏரிக்கரையில், நேற்று நின்றிருந்த குதிரை, திடீரென மிரண்டு ஏரிக்கரை சாலையில் ஓடியது. மேலும், தளி சாலைக்கு சென்று, பஸ் டிப்போ சாலையில் அதிவேகமாக ஓடி சென்றது.
இதனால், பஸ், கார் மற்றும் டூவீலரில் சென்றவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உருவானது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. குதிரை உரிமையாளர் யார், எதற்காக அதை விட்டு சென்றார் என, ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

