sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர் திருவிழா ஆலோசனை கூட்டம்

/

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர் திருவிழா ஆலோசனை கூட்டம்

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர் திருவிழா ஆலோசனை கூட்டம்

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர் திருவிழா ஆலோசனை கூட்டம்


ADDED : மார் 17, 2024 02:48 AM

Google News

ADDED : மார் 17, 2024 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா வரும், 18 ல் துவங்குகிறது. வரும், 24 இரவு சுவாமி திருக்கல்யாணம், 25 காலை தேரோட்டம், 27 ல் தெப்பல் உற்சவம் நடக்கிறது. இதில், தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள். அதனால், தேர்த்திருவிழாவை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், தேர் கமிட்டி தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான மனோகரன் தலைமையில், தேர்ப்பேட்டையில் உள்ள கல்யாணசூடேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, கவுன்சிலர் கிருஷ்ணவேணி ராஜி மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில், பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, வரும், 24 ல் நடக்கும் சுவாமி திருக்கல்யாணத்தை, பக்தர்கள் நெரிசல் இல்லாமல் காணும் வகையில், கோவிலுக்கு வெளியே மேடை அமைத்து, பக்தர்களுக்கு அமர தேவையான இருக்கைகள் ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்துவது. அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, தேரோட்டத்தின் போது, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்துவது. குடிநீர், சாலை வசதி, கழிவறை உள்ளிட்ட வசதிகளை பக்தர்களுக்கு செய்து கொடுப்பது. திருவிழாவின் போது அமைக்கப்படும் கடைகளை இடையூறு இல்லாமல் அமைக்க செய்வது. பக்தர்கள் வந்து செல்வதற்கான பாதை வசதி என, பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us