/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மழையால் வீடுகள் சேதம் கால்நடைகள் மாயம்
/
மழையால் வீடுகள் சேதம் கால்நடைகள் மாயம்
ADDED : டிச 03, 2024 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை, போச்சம்பள்ளியில் நேற்று முன்தினம் முதல் கன-மழை பெய்து
வருகிறது. இதில், ஊத்தங்கரை பகுதிகளில் ஏரியை ஒட்டிய, 10க்கும் மேற்பட்ட
வீடுகள் இடிந்து சேதமாகின. அதேபோல் அப்பகுதி விவசாயிகள், தங்கள் வீடுகளில்
வளர்த்து வந்த ஆடு, மாடுகள் உள்பட, 30க்கும் மேற்பட்ட கால்நடைகள், வெள்ளத்தில்
அடித்து செல்லப்பட்டன. காவேரிப்பட்டணம் அடுத்த பாலேகுளி, தேவீரஹள்ளி,
போச்சம்பள்ளி அடுத்த தொப்-படிகுப்பம் காலனி உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்மழையால், பல வீடுகள் சேதமடைந்துள்ளன.