sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓசூரில் அதிகாரிகளின் மெத்தன போக்கு பூட்டியே கிடக்கும் உழவன் அங்காடி கடைகள்

/

ஓசூரில் அதிகாரிகளின் மெத்தன போக்கு பூட்டியே கிடக்கும் உழவன் அங்காடி கடைகள்

ஓசூரில் அதிகாரிகளின் மெத்தன போக்கு பூட்டியே கிடக்கும் உழவன் அங்காடி கடைகள்

ஓசூரில் அதிகாரிகளின் மெத்தன போக்கு பூட்டியே கிடக்கும் உழவன் அங்காடி கடைகள்


ADDED : செப் 23, 2024 03:38 AM

Google News

ADDED : செப் 23, 2024 03:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் உழவர் சந்தை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள, 2 உழவன் அங்காடி கடைகள் பூட்டியே கிடப்பதால், அதன் தேவை மக்க-ளுக்கு கிடைக்காமல் உள்ளது.

தமிழக எல்லையான ஓசூரில், தமிழகத்திலேயே மிகப்பெரிய உழவர் சந்தை இயங்குகிறது. இங்கு மொத்தம், 295 திண்டு கடைகள் உள்ளன. ஒரு நாளைக்கு, 107 டன் அளவிற்கு காய்க-றிகள், கீரை வகைகள், பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. அதி-கபட்சமாக, 16,000 நுகர்வோர் காய்கறி, பழங்கள் வாங்க வந்து செல்கின்றனர். உழவர் சந்தை வளாகத்தில் வலது, இடதுபுற சாலையோரம், நகர்புற நுகர்வோர் பயனடையும் வகையில், தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரியம் மூலம், 2 உழவன் அங்காடி கடைகள் கட்டப்பட்டன. இதற்கு வாடகை நிர்-ணயம் செய்து, டெண்டர் விடாமல் இழுத்தடிப்பதால், கடந்த ஓராண்டிற்கும் மேலாக பூட்டியே கிடக்கிறது. உழவர் சந்தை-களில் விற்பனை செய்வதை போன்று, தரமான வேளாண் விளை-பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், எளிதில் நகர்புற நுகர்வோரை சென்றடைய உழவன் அங்கவாடி கட்டப்-பட்டது. அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, இந்த உழவன் அங்-காடிகள் பயன்பாடின்றி உள்ளன. ஓசூர் பகுதி மக்கள் தற்போது, விவசாயிகள் சாகுபடி செய்யும் இயற்கை உணவு பொருட்களான காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், வீட்டு தயாரிப்பு உணவு பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். அவற்றை விரும்பி வாங்குவோர் எண்ணிக்கையும் அதிகமாக உள்-ளது. ஆனால், அதிகாரிகள் மெத்தனபோக்கால் உழவன் அங்-காடி எந்த தேவைக்காக ஆரம்பிக்கப் பட்டதோ அந்த தேவை நிறைவேறாமல் உள்ளது. இது, பொதுமக்களை அதிருப்தியடைய செய்துள்ளது.






      Dinamalar
      Follow us