ADDED : டிச 11, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பச்சிளம் குழந்தை பலி
ஓசூர், டிச. 11-
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே கீழ் சின்னகவுண்டாபுரத்தை சேர்ந்தவர் சசிக்குமார், 28. டூவீலர் மெக்கானிக்; இவருக்கும், ஓசூர் அருகே காரப்பள்ளி செந்தில் நகரை சேர்ந்த சத்யா, 21, என்பவருக்கும் கடந்த, 3 ஆண்டுக்கு முன் திருமணமானது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சத்யாவிற்கு கடந்த, 7ல் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் சத்யா தன் தாய் வீடான செந்தில் நகருக்கு திரும்பினார். நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு குழந்தை இறந்தது. ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

