/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எருதுவிடும் விழாவில் காயமடைந்தவர் சாவு
/
எருதுவிடும் விழாவில் காயமடைந்தவர் சாவு
ADDED : மார் 20, 2024 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:பர்கூர்
அடுத்த பூமாலை நகரில் கடந்த, 17ல் எருதுவிடும் விழா நடந்தது.
அப்போது
வேடிக்கை பார்க்க சென்ற பர்கூர், வாணியம்பாடி கூட் ரோட்டை சேர்ந்த துணி
வியாபாரி பார்த்திபன், 44, சென்றுள்ளார். அப்போது ஒரு காளை
பார்த்திபனை நோக்கி ஓடி வந்துள்ளது. காளைக்கு பயந்து ஓடிய பார்த்திபன்
தவறி விழுந்ததில், அவரது தலையில் படுகாயம் ஏற்பட்டது. தர்மபுரி
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம்
இறந்தார். பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

