sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓசூரில் ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு

/

ஓசூரில் ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு

ஓசூரில் ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு

ஓசூரில் ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு


ADDED : டிச 18, 2025 06:21 AM

Google News

ADDED : டிச 18, 2025 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு மருத்துவமனை வளாகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் குத்துவிளக்கேற்றி நேற்று துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

குடும்பம் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவைப்படும் அவசர கால மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம் ஆகியவற்றை வழங்கி பாதுகாக்க, மத்திய அரசின் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மிஷன் சக்தி திட்டத்தில், ஒருங்கிணைந்த சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தளி, கெலமங்கலம், ஓசூர், சூளகிரி தாலுகாவை சேர்ந்த பெண்கள் பயன்பெற முடியும். எனவே, பெண்கள் உதவி எண் 181 மற்றும் ஒருங்கிணைந்த சேவை மையத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

மாவட்ட சமூகநல அலுவலர் சக்தி சுபாசினி, ஓசூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் லட்சுமிஸ்ரீ, ஓசூர் அனைத்து மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பங்கஜம், மிஷன் சக்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராகவி, ஆராதனா தொண்டு நிறுவன இயக்குனர் ராதா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us