/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு படிக்க விண்ணப்பிக்க அழைப்பு
/
வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு படிக்க விண்ணப்பிக்க அழைப்பு
வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு படிக்க விண்ணப்பிக்க அழைப்பு
வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு படிக்க விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஆக 17, 2024 04:08 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் அனிஷா ராணி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு வேளாண் பல்கலை திறந்த வெளி மற்றும் தொலைதுாரக் கல்வி இயக்கத்தின் வழியாக, ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு தோட்டக்கலைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் வகுப்பு துவங்க உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறியவர்கள் மற்றும் எந்த கல்வி படித்திருந்தாலும் சேரலாம். நேர்முக பயிற்சி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும். கட்டணம், 25,000 ரூபாய் மற்றும் விண்ணப்பக் கட்டணம், 100 ரூபாய் செலுத்த வேண்டும்.
இதன் மூலம், உரக்கடை, பூச்சி மருந்து கடை, விதை விற்பனைக் கடை மற்றும் தாவர மருத்துவ மையம் வைக்கலாம். இடுபொருள் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்களாகலாம்.
இது தொடர்பாக மேலும் விபரம் அறிய, 'முதன்மை அலுவலர், தோட்டக்கலைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் பேராசிரியர் மற்றும் தலைவர், மண்டல ஆராய்ச்சி நிலையம், பையூர், கிருஷ்ணகிரி மாவட்டம், உதவி பேராசிரியர் கோவிந்தராஜ், 99422 79190, 73390 02390 மற்றும் உதவியாளர் சுரேகா, 95007 71299, மற்றும் இயக்குனர், திறந்த வெளி மற்றும் தொலைதுாரக் கல்வி இயக்கம், தமிழ்நாடு வேளாண் பல்கலை, கோவை - 641 003, பேராசிரியர், ஒருங்கிணைப்பாளர் லட்சுமி, 04226611229' என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

