sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கைவினைஞர் பயிற்சி திட்ட தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொள்ள அழைப்பு

/

கைவினைஞர் பயிற்சி திட்ட தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொள்ள அழைப்பு

கைவினைஞர் பயிற்சி திட்ட தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொள்ள அழைப்பு

கைவினைஞர் பயிற்சி திட்ட தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொள்ள அழைப்பு


ADDED : அக் 05, 2025 12:57 AM

Google News

ADDED : அக் 05, 2025 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, கைவினைஞர் பயிற்சி திட்டத்தில், அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொள்ள, வரும், 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

கைவினைஞர் பயிற்சி திட்டத்தில், 2026ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 'டிஜிடி'ல் நடத்தப்படும் அகில

இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக பங்கேற்க தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்கள், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, தேர்வு கட்டணம், 200 ரூபாய் செலுத்தி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன், இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, முதல்நிலை தேர்வுகள், கருத்தியல் தேர்வு வருகிற நவ., 4ம் தேதியும், செய்முறை தேர்வு நவ., 5ம் தேதியும் சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். இதற்கான முழு வழிகாட்டுதல்கள், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். தனித்தேர்வராக விண்ணப்பிக்க வரும், 8ம் தேதி கடைசி நாள்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us