நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த பாத்தக்கோட்டா கிரா-மத்தை சேர்ந்தவர் மாரப்பா மகள் பிரியா, 19. நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு, தன் தாய் சுதாவுடன், ஓசூரிலுள்ள தோல் பராமரிப்பு மையத்திற்கு சென்றார்.
அங்கிருந்து வீட்டிற்கு செல்ல, ஓசூர் பஸ் ஸ்டாண்டிற்கு வந்த பிரியா, தன் தாயை காத்-திருக்குமாறு கூறி விட்டு, கழிவறைக்கு சென்றார். அவர் திரும்பி வராததால், அவரது தந்தை மாரப்பா, ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதில், தும்மனப்பள்ளியை சேர்ந்த பிரவீன், 22, என்பவர் மீது, சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.