sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சாலையை கடந்த சிறுத்தை குட்டி: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

/

சாலையை கடந்த சிறுத்தை குட்டி: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சாலையை கடந்த சிறுத்தை குட்டி: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சாலையை கடந்த சிறுத்தை குட்டி: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி


ADDED : நவ 18, 2024 01:56 AM

Google News

ADDED : நவ 18, 2024 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: சூளகிரி அருகே, சாலையை கடந்து சென்ற சிறுத்தை குட்டியை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

தேன்கனிக்கோட்டை அருகே, தண்டரை பஞ்., உட்பட்ட சன்னத்-குமார் நதிக்கரை, தனியார் லே அவுட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், குட்டியுடன் சிறுத்தை சுற்றித்திரிகிறது. அதை பிடிக்க கூண்டு வைத்து பல மாதங்கள் ஆன போதும், இதுவரை சிக்கவில்லை. அதேபோல், அன்னியாளம் பகுதியிலுள்ள கிரஷர் பகுதியிலும் சிறுத்தை, தன் குட்டியுடன் சுற்றி வருகிறது. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நேற்று மதியம், 12:10 மணிக்கு, சூளகிரி - பேரிகை சாலையில் புளியரசி கிராமம் அருகே உள்ள தனியார் மாந்தோப்பு அருகே, அப்பகுதியிலுள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை குட்டி, சாலையை கடந்து சென்றது. இதை அவ்வழி-யாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சியடைந்து, வாக-னங்களை நிறுத்தினர். சிறுத்தை குட்டி உள்ளது என்றால், தாய் சிறுத்தையும் அப்பகுதியில் தான் சுற்றித்திரிய வாய்ப்புள்ளது. சிறுத்தைகள் தாக்கி, மனித உயிர்கள் அல்லது கால்நடைகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளதால், கிராம மக்கள் அச்-சத்தில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us