ADDED : அக் 17, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, தேவசமுத்திரம் வி.ஏ.ஓ., கீதா மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், நேற்று முன்தினம் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா முன் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 3 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. சீதா புகார் படி, கே.ஆர்.பி., டேம் போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
அதேபோல காமன்தொட்டி வி.ஏ.ஓ., சங்கர் மற்றும் அலுவலர்கள் சப்படி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்ற லாரியை சோதனையிட்டதில், 5 யூனிட் எம்.சாண்ட் கடத்த முயன்றது தெரிந்தது. சங்கர் புகார் படி, சூளகிரி போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.