ADDED : ஜன 07, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்
ஓசூர்,: சூளகிரி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சையத் சுல்தான் பாஷா மற்றும் போலீசார், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுண்டகிரி பஸ் ஸ்டாப் அருகே வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, கிரானைட் கற்களை கடத்தி செல்வது தெரிந்தது. லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.