ADDED : நவ 16, 2025 02:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கம் மற்றும் புவியியல் துறை உதவி புவியியலாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள், கிரியனப்பள்ளி - சந்தனப்பள்ளி சாலையில் உள்ள தனியார் கிரானைட் குவாரி அருகே நேற்று வாகன சோதனை செய்தனர்.
அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, 14,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு கிரானைட் கல்லை, உரிய அனுமதி சீட்டு இல்லாமல் கொண்டு செல்வது தெரிந்தது. அதனால் கிரானைட் கல்லுடன் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், தேன்கனிக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். லாரி டிரைவர் மற்றும் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

