/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிரானைட் கல் கடத்திய லாரி பறிமுதல்
/
கிரானைட் கல் கடத்திய லாரி பறிமுதல்
ADDED : நவ 24, 2024 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிரானைட் கல் கடத்திய
லாரி பறிமுதல்
ஓசூர், நவ. 24-
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த மருதாண்டப்பள்ளி வி.ஏ.ஓ., செஞ்சிபதி மற்றும் வருவாய்த்துறையினர், பேரிகை - சூளகிரி சாலையில் உள்ள அனாசந்திரம் கிராமத்தில் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, கிரானைட் கல்லை கடத்தி செல்வது தெரிந்தது. இதனால், கிரானைட் கல்லுடன் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், சூளகிரி போலீசில் ஒப்படைத்தனர். லாரி டிரைவர் மற்றும் உரிமையாளர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.