ADDED : நவ 21, 2024 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மண் கடத்திய லாரி பறிமுதல்
தர்மபுரி, நவ. 21-
தர்மபுரி மாவட்ட, கனிம வளத்துறை துணை இயக்குனர் பன்னீர்செல்வத்திற்கு கிடைத்த ரகசிய தகவலால், நேற்று முன்தினம், பென்னாகரம் தாலுகா, அரக்காசனஹள்ளி பகுதியில் ரோந்து சென்றார். அப்போது, லாரியில் செம்மண் கடத்துவது தெரிந்தது. கனிம வளத்துறையினர் லாரியை சுற்றி வளைத்தபோது, டிரைவர் தப்பினார். செம்மண்ணுடன் லாரியை கைப்பற்றிய அதிகாரிகள், போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். பெரும்பாலை போலீசார், தப்பிச்சென்ற டிரைவர் குறித்து விசாரிக்கின்றனர்.