ADDED : ஜன 13, 2026 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: வரட்டனப்பள்ளி வி.ஏ.ஓ., பாலசுப்பிரமணியம் மற்றும் அலுவலர்கள், நேற்று முன்-தினம் வரட்டனப்பள்ளி மின்வாரிய அலுவலகம் முன், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வ-ழியாக சென்ற ஒரு லாரியை மடக்கி சோதனை-யிட்டதில், 4 யூனிட் மண்ணை வரட்டனப்பள்ளி வழியாக பர்கூருக்கு கடத்த முயன்றது தெரிந்தது.
பாலசுப்ரமணியம் அளித்த புகார் படி, கந்திகுப்பம் போலீசார், மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்து, டிரைவரான வரட்டனப்பள்ளியை சேர்ந்த விஜி, 33, என்பவர் மீது, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்

