ADDED : அக் 12, 2024 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல் கடத்திய லாரி பறிமுதல்
ஓசூர், அக். 12-
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே போடிச்சிப்பள்ளி அருகே, அப்பகுதி வி.ஏ.ஓ., வினோத் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வாகன சோதனை செய்தனர். அப்போது, போடிச்சிப்பள்ளியில் இருந்து லாரியில், தேன்கனிக்கோட்டைக்கு, 17,000 ரூபாய் மதிப்புள்ள கல்லை கடத்தி செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், கெலமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, தப்பியோடிய லாரி டிரைவர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.