ADDED : செப் 28, 2024 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவளப்பிரிவு உதவி இயக்குனர் சரவணன் மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் பர்கூர் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, பாகிமானூர் கூட்ரோடு அருகில் நின்ற லாரியை சோதனையிட்டதில், 5 யூனிட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து சரவணன் அளித்த புகார்படி பர்கூர் போலீசார் கற்களுடன், லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.