ADDED : அக் 28, 2024 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கெலமங்கலம் அடுத்த ஜெ.காருப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே, ஓசூர் தாசில்தார் சின்னசாமி மற்றும் வருவாய்த்துறை அலுவ-லர்கள் வாகன சோதனை செய்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, ஒசபுரத்தில் இருந்து ஓசூருக்கு, 2 யூனிட் கற்களை கடத்தி செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர், கெலமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். தாசில்தார் சின்னசாமி புகார் படி, லாரி டிரைவர் மற்றும் உரிமை-யாளரை போலீசார் தேடி வருகின்றனர்.