ADDED : ஜன 09, 2025 08:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த பி.கே.பெத்தனப்பள்ளியை சேர்ந்தவர் அசோக்குமார், 28. இவர், நேற்று முன்தினம், காலை வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் அசோக்குமாரின் வீட்டில் பீரோவை திறந்து உள்ளே இருந்த பணம், நகைகளை திருட முயன்றார்.
சத்தம் கேட்டு எழுந்த  அசோக்குமார் அவரை மடக்கி பிடித்து, குருபரப்பள்ளி போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர், கிருஷ்ணகிரி வெங்கடா-புரம் அடுத்த உள்ள கொத்தபேட்டாவை சேர்ந்த தருண் 24, என்-பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

