ADDED : ஜூலை 19, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், சூளகிரி அடுத்த அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் பாபு, 34, கட்டட தொழிலாளி. இவர், ஓசூர் தர்கா பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடு ஒன்றில், கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த, 16 மதியம் அவர் வேலை செய்தபோது,
இரும்பு கம்பி மின்சார ஒயரில் பட்டது. இதில் மின்சாரம் தாக்கியதில் பாபு படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார்.ஓசூர் சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.