ADDED : ஏப் 28, 2026 05:31 AM
அ நிறம் | அளவு
ஓசூர்; ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் குபா கெர்வாட், 31. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உளிவீர-னப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த, 25ம் தேதி இரவு, 9:00 மணிக்கு, குடிபோதையில் முதல்மாடி படிக்-கட்டில் ஏறிய போது, தவறி விழுந்து தலையின் பின்புறம் காயமடைந்தார். லேசான காயம் என நினைத்து, தன் உறவினருடன் சென்று சாப்பிட்டு விட்டு, முதல் மாடிக்கு துாங்க சென்றார்.
நேற்று முன்தினம் காலை அவர் எழுந்து வரா-ததால், உறவினர் சென்று பார்த்தார். அங்கு, குபா கெர்வாட் படுக்கையில் உயிரிழந்து கிடந்தார். மத்திகிரி போலீசார் சடலத்தை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்புற தலையில் ரத்தக்கட்டு ஏற்பட்டு அவர் உயிரிழந்தது தெரிந்தது. மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
