/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதாக மேயர் உறுதி
/
அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதாக மேயர் உறுதி
ADDED : டிச 10, 2025 10:40 AM
ஓசூர்: ஓசூர் மாநகராட்சி, 15வது வார்டுக்கு உட்பட்ட துவாரகா நகர் விரிவாக்கம் பகுதியில், மாநகர மேயர் சத்யா ஆய்வு செய்தார். அப்போது, கழிவு நீர் கால்வாய், தெருவிளக்கு, குடிநீர், சாலை வசதி செய்து கொடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்-தனர். குறைகளை கேட்டறிந்த மேயர் சத்யா, உரிய அடிப்படை வசதிகளை செய்து கொடுப்ப-தாக உறுதியளித்தார்.
கவுன்சிலர் லட்சுமி நவீன், தி.மு.க., வட்ட செயலாளர்கள் மோகன் பாபு, மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.ரேஷன் கடை திறப்புகெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே போடிச்சிப்பள்ளி பகுதியில் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் இல்லாமல் இருந்தது. மக்களின் கோரிக்கையை ஏற்று, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு புதிய கட்-டடம் கட்டப்பட்டுள்ளது. இதை, தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் நேற்று மக்கள் பயன்-பாட்டிற்கு திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களான அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்றவற்றை வழங்கினார்.

