/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 17, 2024 01:40 AM
கிருஷ்ணகிரி, டிச. 17-
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், கிருஷ்ணகிரி ஒன்றியம் பூசாரிப்பட்டி ஆவின் பால் கொள்முதல் நிலையம் முன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை வகித்தார்.
இதில், பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு, 10 ரூபாய் உயர்த்தி, பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு, 45 ரூபாய், எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு, 54 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும். கடந்த, 2017 அக்., 25ல் சென்னை உயர்
நீதிமன்றம், மதுரை நீதிமன்ற அமர்வு தீர்ப்பின்படி, ஆரம்ப சங்கங்களிலிருந்து பாலை வண்டிகளில் ஏற்றுவதற்கு முன்பாக பாலின் அளவையும், தரத்தையும் குறித்து கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு ஆண்டுக்கு இருமுறை இலவச தடுப்பூசி போட வேண்டும் என்பன உள்ளிட்ட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்களை எழுப்பினர்.