sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓசூர் அருகே பால் வியாபாரி கொலை தனிப்படை போலீசார் கர்நாடகாவில் முகாம்

/

ஓசூர் அருகே பால் வியாபாரி கொலை தனிப்படை போலீசார் கர்நாடகாவில் முகாம்

ஓசூர் அருகே பால் வியாபாரி கொலை தனிப்படை போலீசார் கர்நாடகாவில் முகாம்

ஓசூர் அருகே பால் வியாபாரி கொலை தனிப்படை போலீசார் கர்நாடகாவில் முகாம்


ADDED : ஜன 10, 2024 12:32 PM

Google News

ADDED : ஜன 10, 2024 12:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் அருகே நடந்த பால் வியாபாரி கொலை தொடர்பாக, தனிப்படை போலீசார் கர்நாடகாவில் முகாமிட்டு சந்தேகத்தின் பேரில் இருவரை தேடி வருன்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா, பாகலுார் அருகே எழுவப்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ், 44; பால் வியாபாரி. கடந்த, 6 இரவு ஊருக்கு செல்லும் வழியில், மர்ம நபர்களால் கத்தியால் குத்தி, இரும்பு ராடால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த முனிராஜின் தந்தை கோபாலப்பா மீது இருந்த முன்விரோதம் காரணமாக, அவரது மகன் முனிராஜ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. அதன்படி, எழுவப்பள்ளியை சேர்ந்த மது மற்றும் அவரது சித்தி மகன் விஜயகுமார் ஆகியோரை போலீசார் சந்தேகத்தின் பேரில் தேடி வருகின்றனர்.

அவர்கள் இருவரது மொபைல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால், இக்கொலையில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் பாகலுார் போலீசாருக்கு எழுந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் விஜயகுமார் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அதனால், அம்மாநிலத்தில் அவர்கள் பதுங்கியிருக்கலாம் என்ற கோணத்தில், பாகலுார் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான இரு தனிப்படை போலீசார், அங்கு முகாமிட்டு இருவரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us