ADDED : ஜூலை 23, 2026 01:33 AM
அ நிறம் | அளவு
சூளகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே குரும்ப சப்படி கிரா-மத்தை சேர்ந்தவர் மூர்த்தி, 24. மனநலம் பாதிக்கப்பட்டவர்; கடந்த, 20ம் தேதி இரவு, 8:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு, அப்பகுதியில் உள்ள சின்ன வெங்கட்ராஜ் என்பவரது கிணற்றில், மூர்த்தி பயன்படுத்தி வந்த துண்டு இருந்தது.இதனால் மூர்த்தி கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்-தேகத்தில், மோட்டார் மூலமாக தண்ணீரை வெளியேற்றி பார்த்த-போது, கிணற்றுக்குள் மூர்த்தியின் சடலம் இருந்தது. கிணற்-றுக்குள் அவர் தவறி விழுந்து உயிரிழந்தது தெரிந்தது.
சூளகிரி போலீசார்
விசாரிக்கின்றனர்.
