/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் மாநகராட்சியில் எம்.எல்.ஏ.,-மேயர் ஆய்வு
/
ஓசூர் மாநகராட்சியில் எம்.எல்.ஏ.,-மேயர் ஆய்வு
ADDED : டிச 13, 2025 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட, 34வது வார்டு முதல், 45 வார்டு வரை உள்ள பாளையம், பெரியார் சதுக்கம், டி.வி.எஸ்., நகர், அந்திவாடி, மத்திகிரி, பழைய மத்தி-கிரி, தின்னுார், ராயக்கோட்டை அட்கோ பேஸ் 10, பாரதி-தாசன் நகர் ஆகிய பகுதிகளில் ஓசூர் தி.மு.க., எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் ஆய்வு மேற்-கொண்டு, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டனர்.
மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா, தி.மு.க., மேற்கு மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், மாவட்ட பொருளாளர் சுகு-மாரன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க., நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

