ADDED : டிச 24, 2024 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாரதியார் நகரை சேர்ந்தவர் அமீர், 36, டிரைவர். இவர் மனைவி அஸ்மா சுல்தான், 31. இவர்களுக்கு, 9 வயதில் பெண் குழந்தை மற்றும் 1 வயதில் ஆண் குழந்தை உள்ளன.
கடந்த, 3ம் தேதி காலை, 10:00 மணிக்கு, குழந்தைகளுடன் வீட்டிலிருந்து வெளியே சென்ற அஸ்மா சுல்தான், மீண்டும் திரும்பவில்லை. அவரது கணவர் புகாரில், பெங்களூருவை சேர்ந்த வாசிம் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஹட்கோ போலீசார், அஸ்மா சுல்தானை தேடி வருகின்றனர்.