ADDED : ஜூலை 08, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூளகிரி, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தோலக் பூரி, 40. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சின்னார் கிராமத்தில் தங்கி, தனியார் நிறுவனத்தில் மிஷின் ஆப்பரேட்டராக உள்ளார்.
இவரது மனைவி மானஷா, 35. இவர்களுக்கு, 10 வயதில் மகன், 4 வயதில் மகள் உள்ளனர். கடந்த, 5 காலை, 8:15 மணிக்கு வீட்டிலிருந்து குழந்தைகளுடன் வெளியே சென்ற தாய் மானஷா திரும்பி வரவில்லை. அவரது கணவர் புகார் படி, சூளகிரி போலீசார் தேடி வருகின்றனர்.