ADDED : ஆக 31, 2026 02:33 AM

அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: தளியில் இருந்து மதகொண்டப்பள்ளி வழியாக கர்நாடக மாநிலத்-திற்கு எம்.சாண்ட் கடத்தப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிக-ளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் உச்சனப்-பள்ளி ஏரிக்கு அருகே சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக லாரியில் சட்ட விரோதமாக எம்.சாண்ட் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து, 30,000 ரூபாய் மதிப்புள்ள எம்.சாண்டை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்-பாக, குப்பம்மாள் கொடுத்த புகார் படி, தளி போலீசார் வழக்குப்-பதிந்து லாரி டிரைவர் மது, 33, என்பவரை கைது செய்து, விசா-ரித்து வருகின்றனர்.
