ADDED : பிப் 15, 2026 04:51 AM
அ நிறம் | அளவு
ஓசூர்: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இயங்குகிறது.
இங்கு, பட்டு புழுவியல் துறையில், 4ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் அப்துஸ் சலாம், பாரிவேல், தருண் பிரசன்னா, தினேஷ்குமார், கோகுல், இந்து பிரகாஷ், ஜனார்த்தனன் ஆகியோர், ஓசூர் பட்டு வளர்ச்சி துறை அலுவல-கத்தில், அனுபவ கல்வியை கற்கும் வகையில், ஊரக பட்டுப்புழு-வியல் பணி குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதி-யாக, ஓசூர் அருகே உத்தனப்பள்ளியில் உள்ள விவசாயி குணசே-கரன் என்பவருக்கு சொந்தமான பட்டுபுழு வளர்ப்பு பண்-ணையை மாணவர்கள் பார்வையிட்டனர். அவர்களுக்கு, மல்பெரி செடி வளர்ப்பு மற்றும் பராமரிப்புகுறித்து விவசாயி விளக்கினார்.
