sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாணவியருக்கு அருங்காட்சியக பயிலரங்கம்

/

மாணவியருக்கு அருங்காட்சியக பயிலரங்கம்

மாணவியருக்கு அருங்காட்சியக பயிலரங்கம்

மாணவியருக்கு அருங்காட்சியக பயிலரங்கம்


ADDED : டிச 10, 2025 10:37 AM

Google News

ADDED : டிச 10, 2025 10:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சிய-கத்தில், மத்துார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தொல்லியல் மன்ற மாணவியர், 72 பேருக்கு, ஒரு நாள் அருங்காட்சியக பயிலரங்கம் நடந்தது. இதில், அருங்காட்சியக தோற்றம், வரலாறு, அவற்றின் பரிணாமங்கள், அரும் பொருட்கள் சேகரிக்கும் முறைகள் குறித்து விளக்கம் அளித்-தனர்.

தொடர்ந்து, அருங்காட்சியகத்தில் உள்ள புதிய கற்கால கல்லாயுதங்கள், சங்ககால பானைகள், செங்கல், அகரம் மற்றும் பாரூர் செல்லகுட்டப்-பட்டி ஜெல்லிக்கட்டு நடுகற்கள், பீமாண்டப்பள்ளி நடுகல், எடவனஹள்ளி ஆநிரை மீட்டல் நடுகல், மாவட்ட வரலாற்றினை தாங்கியுள்ள பூர்வாதி-ராயர் கல்வெட்டுகள், புதைப்படிவங்கள், கோட்-டையை பாதுகாக்க பயன்பட்ட பீரங்கிகள், கல் குண்டுகள், ஆயுதங்கள், கலை சார்ந்த தெருக்-கூத்து, பழங்குடி மக்களின் வாழ்வியல் பொருட்கள், பதப்படுத்தி வைத்துள்ள விலங்கி-னங்கள் மற்றும் தொல்லியல் துறையில் அக-ழாய்வு செய்யப்பட்ட மயிலாடும்பாறை இரும்பு வாள், சென்னானுார் இடைகற்கால கற்கருவிகள், தமிழி எழுத்து பானை ஓடுகள் தொடர்பாக, காப்-பாட்சியகர் சிவக்குமார் விளக்கினார்.

முடிவில், அகழாய்வு மேற்கொள்வது குறித்து மாணவிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்-பித்தனர். தலைமை ஆசிரியர் ஆனந்திமாலா, வரலாற்று ஆசிரியர் சவுந்தரி மற்றும் ஆசிரி-யர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை அருங்காட்சியக பணியாளர்கள் செல்வகுமார், பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us