/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேசிய சிலம்பம் போட்டி: அரூர் மாணவர் முதலிடம்
/
தேசிய சிலம்பம் போட்டி: அரூர் மாணவர் முதலிடம்
ADDED : ஏப் 17, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்:தேசிய அளவிலான சிலம்பம் போட்டி, கன்னியாகுமரியில் நடந்தது. இதில், 350 மாணவர்கள் கலந்து கொண்டனர். ஜூனியர் பிரிவில், மூன்று பிரிவுகளில் பங்கேற்ற தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர் சுமன், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவர் சுமன் மற்றும் அவருக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் பழனிதுரை, சுரேஷ், சங்கர், முருகேசன் ஆகியோரை, தலைமையாசிரியர் ஆறுமுகம் மற்றும் ஆசிரியர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள் பாராட்டி, நினைவு பரிசு வழங்கினர்.