ADDED : ஆக 21, 2026 01:16 AM
அ நிறம் | அளவு
ஓசூர்: மத்திகிரி அடுத்த எடையநல்லுாரை சேர்ந்தவர் சுரேந்தர்குமார், 38. அதே பகுதியை சேர்ந்தவர் அரவிந்த்குமார், 36. இருவரும் மதகொண்டப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த, 18ல், பணி முடிந்து இருவரும் டி.வி.எஸ்., ரைடர் பைக்கில் சென்றனர். மாலை, 5:30 மணியளவில் மத்திகிரி கால்-நடை பண்ணை அருகே சென்றபோது, எதிரில் வந்த ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஏற்-பட்ட தகராறில், இருவரையும், ஸ்கூட்டரில் வந்தவர்கள் தாக்கி சென்றனர். இதுகுறித்து சுரேந்தர்குமார் மத்திகிரி போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், அவர்களை தாக்கியது பழைய மத்திகி-ரியை சேர்ந்த கூலித்தொழிலாளிகளான விகாஸ், 24, விஜய், 23, என தெரிந்தது. இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
