/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
5,000 பேப்பர் துண்டுகளில் வள்ளலார் உருவம் அமைப்பு
/
5,000 பேப்பர் துண்டுகளில் வள்ளலார் உருவம் அமைப்பு
ADDED : அக் 06, 2022 12:32 PM
ஓசூரில், 5,000 சிறு, சிறு பேப்பர் துண்டுகள் மூலம், வள்ளலார் உருவத்தை தனியார் நிறுவன ஊழியர் வடிவமைத்து அசத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சின்ன எலசகிரி காமராஜ் நகரை சேர்ந்தவர் லுாகாஸ், 33; பெங்களூரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஐஸ் குச்சிகளில், தன் மனைவியுடன் சேர்ந்து, 1,330 குறள்களை எழுதி, திருக்குறள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நேற்று வள்ளலாரின், 200வது பிறந்த நாளையொட்டி, அவரது உருவத்தை வரைய லுாகாஸ் முடிவு செய்தார். அதன்படி, 5,000 சிறு, சிறு பேப்பர் துண்டுகளை கொண்டு, மொசைக் ஆர்ட்டில் ஒரு மாத கடின உழைப்பின் மூலம், நான்கடி உயரம், இரண்டரை அடி அகலத்தில், வள்ளலாரின் உருவத்தை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.
இது குறித்து, லுாகாஸ் கூறுகையில், ''நிறுவனத்தில் பணி முடிந்து வீடு திரும்பி பின், நேரம் கிடைக்கும்போது, வள்ளலார் உருவத்தை வடிவமைத்தேன்,'' என்றார்.