ADDED : பிப் 21, 2026 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் கலாசவுத்திரி மகன் சோனுகுமார், 13, கிருஷ்ண-கிரி மாவட்டம், மூக்கண்டப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் அருகே, குடும்பத்துடன் தங்கியிருந்தார்.
சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்த சோனு-குமார், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. அவரது தந்தை புகார்படி, சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.

