ADDED : நவ 28, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி,
பீஹார் மாநிலம், சம்பாரண் பகுதியை சேர்ந்தவர் ஜோகு பைட்டா, 42. தற்போது வேப்பனஹள்ளி அடுத்த திம்மச்சந்திரத்தில் தங்கி, ஒரு கோழிப்பண்ணையில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த, 23 மதியம், கோழிப்பண்ணையில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் பணிக்கு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் காணவில்லை. இதுகுறித்து,
அவரது உறவினர் புகார் படி, வேப்பனஹள்ளி போலீசார் தேடி வருகின்றனர்.

