ADDED : ஆக 21, 2026 01:15 AM

கிருஷ்ணகிரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செவிலியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் உள்ளிட்ட செவிலியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்-கைகளை வலியுறுத்தி கடந்த, 7ம் தேதி முதல்கட்ட ஆர்ப்-பாட்டம் நடத்தினர். இதையடுத்து, நேற்று, 2ம் கட்ட போராட்டம் செவிலியர்கள் ஸ்ரீதேவி, சேது, லட்சுமி, சுதாகர் மற்றும் பாலமுருகன் ஆகியோர் தலைமையில் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில், மறு பணி அமர்த்தும் ஆட்குறைப்பு தொடர்-பான அரசாணை எண். 204ஐ உடனே ரத்து செய்ய வேண்டும். தொகுப்பூதிய முறையை முற்றிலும் ரத்து செய்து, தொகுப்பூதி-யத்தில் பணிபுரியும் அனைத்து செவிலியர்களையும் உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
'ஸ்டாப் நர்ஸ்' என்ற பதவி பெயரை, 'நர்சிங் ஆபீஸர்' என பெயர் மாற்றம் செய்து, செவிலியர்களுக்கான பணி விளக்க அரசா-ணையை உடனே வெளியிட வேண்டும். செவிலியர் போதகர் பணிக்கு, ஒப்பந்த நியமனத்தை கைவிட வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், என்பது உள்-ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
